ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தற்போது பிரியா ஜீவாவிடம் விவாகரத்து பத்திரத்தை நீட்டி தனக்கு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது காவ்யாவின் இரட்டைக் குழந்தைகள் கலைந்துவிட்டது. தேர்வு எழுதுவதற்காக விமானத்தில் சென்ற காவ்யாவுக்கு அடி வயிற்றில் வலி ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு அங்கு கரு கலைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விஷயத்தை காவியா வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். மேலும் தனது கணவர் பார்த்தியிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். இதனால் காவியாவிற்கும் பார்த்திக்கும் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த பரபரப்பாக தற்போது ஜீவா பிரியா ஆகிய இருவரும் பிரிந்து விட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோவில் பிரியா ஜீவாவை தேடி வந்து விவாகரத்து பத்திரத்தை நீட்டுகிறார். மேலும் புதிதாக செல்ல இருக்கும் வீட்டின் ஒப்பந்த பத்திரத்தையும் நீட்டுகிறார். என்னுடைய உணர்வுகளை மதிக்கத் தெரியாத நபருடன் எனக்கு வாழ விருப்பமில்லை. நீங்கள் என்னுடன் வாழ விரும்பினால் இந்த வீட்டு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திடுங்கள்.
இல்லையென்றால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு என்னை தனியாக வாழ விடுங்கள் என்று சொல்லி ஜீவாவின் மனதை காயப்படுத்துகிறார் பிரியா. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television