ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஜீவா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட செய்தியை பிரியா அறிந்து கொள்கிறார். மேலும் அவருக்கு விவாகரத்து பத்திரமும் கைகளில் கிடைக்கிறது. இதை பார்த்து பிரியா அதிர்ந்து போய் தற்போது ஜீவாவின் வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக கூறிவிட்டு செல்கிறார். ஈரமான ரோஜாவே சீரியல் மக்கள் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் இரு ஜோடிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் ஜீவா – பிரியா மற்றும் காவியா – பார்த்தி என்ற இரு ஜோடிகள் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜீவா மற்றும் பிரியா ஜோடிகளுக்கு ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் இருக்கிறது. இருவரும் விரைவில் இணைந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் ஆவலை தெரிவித்து வருகின்றனர்.்சில நாட்களாக ஒளிபரப்பாகி வந்த எபிசோடில் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இருந்தனர். வெளியில் டூருக்கு செல்வது, பைக்கில் ரைட் செல்வது என்று ஜாலியாக இருந்து வந்தனர். இந்த நிலையில் ஜீவாவுக்கு போன் வருகிறது. அதில், ஜீவா தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு வரேன் என சொல்லி இருக்கிறார் என்று போனில் கேட்கிறது. பின்னர் ஜீவா கையெழுத்திட்ட விவாகரத்து பத்திரமும் பிரியாவிற்கு கிடைக்கிறது. இதை பார்த்து கதறி அழுகிறார் பிரியா.

பின்னர் காரில் சென்று கொண்டிருந்த அவர் இடையில் நிறுத்தி பிரியா விவாகரத்து பத்திரத்தை காட்டி இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்ட, நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பை புரிந்து கொண்டேன், இது முன்னர் ஒரு முறை கையெழுத்திட்ட பத்திரம். அதனால்தான் இதை மறைத்து வைத்தேன் என்று ஜீவா கூற, இனி நீங்க யாரோ நான் யாரோ என்ன சொல்லிக்கொண்டு பிரியா அங்கிருந்து கிளம்புகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television