விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது ஜீவாவை பிரியா பிரிந்து வேலைக்காக துபாய் சென்ற நிலையில் அவரைத் தேடி துபாய்க்கு வந்திருக்கிறார் பிரியா. மேலும் விவாகரத்து பத்திரத்தை கிழித்து எறிந்து தன்னுடைய காதலை முதன்முறையாக ஜீவாவிடம் வெளிப்படுத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரில் ஜீவா மற்றும் பிரியா ஜோடிகள் இருவரும் எப்பொழுது இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. காவியா மற்றும் பார்த்தி ஜோடிகள் ஓரளவிற்கு இணைந்து விட்ட நிலையில் இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பிரியாவை விட்டுவிட்டு வேலைக்காக ஜீவா துபாய் சென்றிருக்கிறார்.

அங்கு தன்னுடன் பணியாற்றுபவரிடம் பிரியாவை பார்க்க வேண்டும் அவரை பார்க்காமல் இருக்க முடியாது என்று கூறி கண் கலங்கி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பிரியா, விவாகரத்து பத்திரத்தை கிழித்து எறிந்து ஜீவாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television