கதிர், வளவன், ஜனனி கண்ணில் மண்ணை தூவி விட்டு எஸ்கேப் ஆன ஜீவானந்தம்.! அதிரடி ப்ரோமோ.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ஒரு புறம் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக வளவன் மற்றும் கதிர் கேங் அலைந்து கொண்டிருக்கின்றனர். மறுபுறம் அவரை தேடி ஜனனி சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் இருவரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தனது மனைவி மற்றும் மகளை சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜீவானந்தம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிர், வளவன், ஜனனி கண்ணில் மண்ணை தூவி விட்டு எஸ்கேப் ஆன ஜீவானந்தம்.! அதிரடி ப்ரோமோ.! 1
ஜீவானந்தமின் மனைவி வெண்பா உங்களை மிகவும் மிஸ் செய்கிறார். அவளை நினைத்தால் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜனனி அவர்களைத் தேடி மலைப்பாதையில் வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே வீட்டில் அப்பத்தா எதிரில் அமர்ந்து கத்திக் கொண்டிருக்கிறார் குணசேகரன். இந்த வீட்டில் எல்லா பொம்பளைகளுக்கும் பயப்பட வேண்டியதாக இருக்கிறது. 80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதாக இருக்கிறது 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதாக இருக்கிறது என்று சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறார்.

இனி அப்பத்தா என்ன செய்யப் போகிறார்? அவர் ஜீவானந்தம் பற்றிய உண்மைகளை கூறுவாரா? மர்மங்கள் அவிழ்க்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்