எதிர்நீச்சல் சீரியலில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தத்தை சுற்றி வளைத்த கதிர் மற்றும் வளவன் கேங் அவர்களை அடித்து துவைக்கின்றனர். இது அனைத்தையும் ஜனனியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு எதிராக ஜீவானந்தமும் கட்டையை எடுத்து சுழற்றிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் வெளியான ப்ரோமோவில் அப்பத்தா குணசேகரனைப் பார்த்து ஜீவானந்தம் செய்தது அனைத்துமே என் நன்மைக்காகத்தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ஒரு புறம் குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். தொடர்ந்து இரண்டாவதாக ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தம் தனது மகளிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர், வளவன் கேங் அந்த வீட்டை முற்றுகையிட்டு அவர்களை தாக்கத் தொடங்குகின்றனர். ஜீவானந்தமும் பதிலுக்கு தாக்கத் தொடங்குகிறார்.

இதையெல்லாம் ஜனனி ஒளிந்து நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன நடக்கும் என்கிற பரபரப்பும் பதட்டமும் எழுந்திருக்கிறது. கதை நகரும் விதத்தைப் பார்த்தால் ஜீவானந்தம் மற்றும் அவரது மனைவியை இவர்கள் கொலை செய்யலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV