சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் அப்பத்தாவை குணசேகரன் மீண்டும் அறையில் வைத்து பூட்டி அடைந்து விடுகிறார். இன்னொரு புறம் யாருமே இல்லாமல் ஜனனி மற்றும் ஜீவானந்தம் இருவரும் இணைந்து அவரது மனைவிக்கு இறுதிச்சடங்குகளை செய்திருக்கின்றனர். அந்த சோகமான ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பத்தாவின் 40% பங்குகளை அதிகரித்துக் கொண்டதால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன் ஜீவானந்தத்தைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார். அவர்களும் ஜீவனாந்தம் வீட்டை நெருங்கி, அவரை தாக்க தொடங்குகின்றனர். ஆனால் வளவன் சுட்டதில் எதிர்பாராத விதமாக அவரது மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு பலியாகிறார். இந்த நிலையில் மறுபுறம் ஜீவானந்தம் தன்னை ஏமாற்றி கையெழுத்து பெற்றதாக அப்பத்தாவிடம் குணசேகரன் கையெழுத்து பெறுகிறார். மேலும் ஜீவானந்தத்தை கைது செய்ய வேண்டும் என்று அவர் போலீசை அனுப்புகிறார்.
இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் அப்பத்தாவை குணசேகரன் அறையில் அடைத்து வைத்திருக்கிறார். அது குறித்து ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் கேள்வி கேட்கின்றனர். இன்னொரு புறம் யாருமே இல்லாமல் ஜனனியும் ஜீவானந்தமும் இணைந்து இறந்து போன அவரது மனைவிக்கு இறுதிச்சடங்குகளை செய்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV