எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வாய் தவறி ஜீவானந்தம் பற்றி குணசேகரனிடம் ரேணுகா பேச முயற்சிக்கிறார். அப்போது அவரை ஜனனி தடுத்து நிறுத்துகிறார். அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்புடன் நாளுக்கு நாள் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் குணசேகரன் ஆட்களை அனுப்பி ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்கிறார். அந்த விஷயம் தற்போது ஜனனி, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, சக்தி என அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவானந்தத்தின் மனைவி இறப்பதற்கு தாங்களும் ஒரு காரணமாகிவிட்டோமே என்று சொல்லி வீட்டில் உள்ள அனைவரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கதிர் தனது மனைவியிடம் சென்று காபி போட்டுத் தரும்படி கேட்க, நந்தினியோ கீழ உங்க அண்ணன் இருப்பாரு அவரிடம் போய் கேளு என்று அடித்து துரத்தி விடுகிறார். அடுத்தபடியாக வெளியிலிருந்து வரும் ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களிடம் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜீவானந்தம் பற்றிய பேச்சை ரேணுகா எடுக்க ஜனனி உடனடியாக அவரை தடுத்து நிறுத்துகிறார்.
இதனால் குணசேகரனுக்கு சந்தேகம் வருகிறது. இவர்களுக்கு ஒரு வேலை உண்மை தெரிந்து விட்டது என்று அவர் சந்தேகிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV