ஈஸ்வரி சொன்னதை கேட்டு ஆடிப் போன குணசேகரன்.! தரமான ஆப்பு வைத்த ஈஸ்வரி.!

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலில் மூன்று நாள் இடைவேளைக்கு பிறகு தற்போது ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். மழை காரணமாக டப்பிங் பணிகள் மற்றும் எடிட்டிங் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் ப்ரோமோ தாமதமாக வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தேர்தலில் நிற்கும் சாருபாலாவுக்கு எதிராக தனது மனைவி ஈஸ்வரியை நிற்க வைக்க குணசேகரன் முடிவு செய்கிறார். ஈஸ்வரியும் சாருபாலாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்கிறார். ஆனால் சாருபாலாவோ, “ஈஸ்வரிக்கு இந்த தேர்தல் முக்கியமானது, ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து முதல் முறையாக முயற்சி செய்திருக்கிறார், அவருக்கு நான் வழி விடுகிறேன்” என்று சொல்லி தேர்தலில் இருந்து வாபஸ் பெறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரி சொன்னதை கேட்டு ஆடிப் போன குணசேகரன்.! தரமான ஆப்பு வைத்த ஈஸ்வரி.! 1
இந்த செய்தி தெரிந்து கொண்டு வீட்டிற்கு வரும் குணசேகரன், “இனி ஈஸ்வரி தேர்தலில் நிற்கத் தேவையில்லை. ஈஸ்வரி இனி சந்தோஷமாக இருக்கலாம். ஒரு பொம்பளைய எதிர்த்து நான் ஏன் நிற்கணும் என நினைத்து தான் ஈஸ்வரியை நிற்க வைத்தேன். ஆனால் சாருபாலா நிற்காததால் நானே நேரடியாக போட்டியிடுகிறேன்” என்று கூறுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி என அனைவரும் வீட்டிற்குள் வருகின்றனர். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி குணசேகரிடம், “நான் தேர்தலில் நிற்க போகிறேன், மனுவை வாபஸ் வாங்கப் போவதில்லை” என்று கூறுகிறார். இதனால் குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே பார்க்கிறார்.


இனி ஈஸ்வரி தேர்தலில் நிற்கும் எபிசோடுகள் தீயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்