ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ஆதிரை.! யப்பா என்னா அடி.? தரமான சம்பவம்

‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜான்சி ராணியின் கன்னத்தில் ஆதிரை ஓங்கி ஒரு அறை அறைகிறார். இதனால் ஜான்சிராணி என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து போயிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் பலரும் ஆதிரையின் இந்த செயலை வரவேற்று வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பல பரபரப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. தற்போது கதைப்படி குணசேகரனின் கடைசி தம்பியாக இருக்கும் கதிரை மர்ம நபர்கள் சிலர் நடுரோட்டில் வைத்து அடித்து துவைத்து விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ஆதிரை.! யப்பா என்னா அடி.? தரமான சம்பவம் 1
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கதிரின் இந்த நிலைமைக்கு காரணம் எஸ்கேஆரும் அவரது தம்பிகளும் தான் என்று சொல்லி குணசேகரன் கணிக்கிறார். ஏனென்றால் எஸ்கேஆரின் தம்பி அருண், ஆதிரையை காதலித்தபோது அவர்களின் காதலை தடுப்பதற்காக அருணை விபத்தில் சிக்க வைத்தது கதிரும் குணசேகரனும் தான் என்கிற உண்மை தற்போது எஸ்கேஆருக்கு தெரிய வந்திருக்கிறது. எனவே எஸ்கேஆர் தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்று சொல்லி குணசேகரன் அவரது வீட்டிற்கு கிளம்பி செல்கிறார். அப்போது ஆதிரை தான் வீட்டை விட்டு வெளியே செல்லப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிக்பாஸ் பிரபலத்தை கரம்பிடித்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஹீரோயின் தேஜஸ்வினி

ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ஆதிரை.! யப்பா என்னா அடி.? தரமான சம்பவம் 3

அப்போது அங்கு வரும் ஜான்சி ராணி எங்கே போகிறாய் என்று ஆதிரையிடம் கேட்க, கோபமான ஆதிரை ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment