என் பொண்டாட்டிய வாடி போடின்னு பேசுற வேலை வச்சிக்காதீங்க.! கோபத்தில் கொந்தளித்த கதிர்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நந்தினியை வாடி போடி என்று பேசிக் கொண்டிருக்கும் குணசேகரனை கதிர் எதிர்த்து பேசுகிறார். மேலும் தனது மனைவியை இனி வாடி போடி என்று பேசக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். இதனால் குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் சக்தி வரிசையில் தற்போது கதிரும் மனம் திருந்தி வாழத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கதிரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் பொண்டாட்டிய வாடி போடின்னு பேசுற வேலை வச்சிக்காதீங்க.! கோபத்தில் கொந்தளித்த கதிர்.! 1
‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரனின் மூன்றாவது தம்பியாக இருக்கும் கதிர் இத்தனை நாட்களாக தனது மனைவி மற்றும் மகளை தனது அண்ணன் பேச்சை கேட்டுக் கொண்டு கொடுமைப்படுத்தி வருகிறார். ஆனால் அவரை அடையாளம் தெரியாத சில நபர்கள் அடித்து துவைக்க, கை கால் சரியில்லாமல் நடக்க முடியாமல் கதிர் கஷ்டப்படுகிறார்.அப்போது அவரது மனைவி நந்தினியும் மகள் தாராவும் கதிரை அருகில் இருந்து பார்த்துக் கொள்கின்றனர். அப்போதிலிருந்து கதிருக்கு தனது மனைவி மற்றும் மக்கள் மேல் பாசம் வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஆதி குணசேகரன் கதிரின் மனைவி நந்தினியை ஒருமையில் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த கதிர் கோபத்தில் கத்துகிறார் இனி என்னுடைய மனைவியை வாடி போடி என்று அழைக்காதீர்கள் என்று அவர் குணசேகரிடம் கூறுகிறார். இதனால் குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். சக்தி வரிசையில் தற்போது கதிரும் மனம் மாறி தனது மனைவிக்கு ஆதரவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்