சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது வெளியாகி இருக்கும் குணசேகரனுக்கு மற்றும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது. இந்த செய்தியை கேட்ட அவர் பீதியில் உறைந்து போய் இருக்கிறார். ‘எதிர்நீச்சல்’ சீரியலில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீவானந்தம் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லி ஜனனி, சக்தி இருவரும் நீதிபதியிடம் முறையிட்டிருக்கின்றனர். குணசேகரனுக்கு எதிராக வாதாடுவதற்கு சாருபாலாவை வக்கீலாக நியமித்திருக்கின்றனர். இந்த செய்தி அறிந்த குணசேகரனுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது அதிர்ச்சியாக குணசேகரனுக்கு இன்று ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரனிடம் ஜனனி ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கிறார். தவறு செய்த குணசேகரனை சும்மா விடமாட்டேன் என்று சொல்லி அவர் ஆவேசப்படுகிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும், “ஜனனி வாயாலே தான் வடை சுடுவார், வேறு ஒன்றும் காரியத்தில் இல்லை” என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர். தொடர்ந்து வீட்டிற்கு வரும் சிலர் ஆதி குணசேகரனிடம் எஸ்.கே.ஆர் தேர்தலில் நிற்கப் போவதில்லை. அதுக்கு பதிலாக அவரது மனைவியை நிறுத்தப் போகிறார் என்று கூறுகின்றனர். இதை கேட்ட ஆதி குணசேகரன் மீண்டும் அதிர்ச்சி அடைகிறார்.
பின்னர் தனது தம்பிகளுடன் தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபடுகிறார். இதில் அவர் ஈஸ்வரியை சாருபாலாவுக்கு எதிராக களம் இறக்க முடிவெடுத்துள்ளார். இதற்கு ஈஸ்வரி சம்மதிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV