சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சக்தியும், ஜனனியும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி எனக்கு நீ வேண்டும் சக்தி, நான் அப்படித்தான் நினைக்கிறேன், நீ என்னை எப்படி நினைக்கிறாய் என்று கேட்க நீயும் எனக்கு வேணும் ஜனனி என்று சொல்லி இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பேரிழப்பாக இருக்கிறது நடிகர் மாரிமுத்துவின் மறைவு. மாரிமுத்துவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்கிற கருத்து நிலவி வரும் நிலையில் தொடர்ந்து சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மாரிமுத்துவுக்கு பதிலாக வேலராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவரே சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஜனனியும் சக்தியும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி சக்தியின் கைகளை பிடித்து கொள்கிறார். மேலும் எனக்கு சக்தி தான் வேணும் என்கிற எண்ணம் என் மனதிற்குள் இருக்கிறது. உனக்கு எப்படி இருக்கிறது என்று சக்தியிடம் கேட்கிறார் ஜனனி.

அப்போதே ஜனனி நீ மட்டும் தான் என் வாழ்க்கை என்று கூறுகிறார். இதனால் மகிழ்ந்து போன ஜனனி சக்தியை கட்டி அணைத்து அழுகிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நாண்டி ஃபுட்ஸ் சார்பில் உணவுகள் தயாரிக்கப்பட்டு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வரும் கரிகாலன் அக்கா எனக்கு தெரியாமல் ஏதோ பண்ணுகிறாய் என்று சொல்லி உணவுகளை பிரித்து பார்க்க போகிறார். அப்போது நந்தினி அலறி அடித்துக் கொண்டு அதை தொட வேண்டாம் என்று கூறுகிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV