எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஞானம் ரேணுகாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கிறார். அப்போது “சத்தியமா நீ எல்லாம் இதற்கு அனுபவிப்படா” என்று சொல்லி ரேணுகா கதறி அழுது கொண்டிருக்கிறார். இதனால் ரேணுகா நடனம் சொல்லிக் கொடுக்கும் விஷயமும் வீட்டிற்கு தெரிந்து விட்டதோ என தோன்றுகிறது. எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் காணாமல் போய்விட்டார் அவரை கண்டுபிடித்து தம்பிகள் அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர் இருக்கும் இடமும் தெரிந்து விட்டது் இன்னும் இரண்டு நாட்களில் நான் வீட்டிற்கு வந்து விடுவேன் கோவில் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அங்கு வைத்து ஜீவானந்தம் மற்றும் அப்பத்தா கதையை முடிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் வீட்டிற்கு வந்த தம்பிகள் நந்தினி உணவு விநியோகம் செய்யும் வேலையில் சேர்ந்திருப்பதையும், ஈஸ்வரி கல்லூரியில் மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுக்க செல்வதையும் தெரிந்து கொள்கின்றனர். பின்னர் இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லக்கூடாது என்று கட்டளை இடுகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனது மகன்களிடம் மூத்த தலை ஒன்று இறந்து விடும் என்று ஜோசியர் சொன்னார் அல்லவா? நான் இறந்து விடுவேன், என் மகனை பார்க்காமல் கண்ணை மூடி விடுவேன் என எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லி விசாலாட்சி அழுது கொண்டிருக்கிறார். அப்போது கதிர் மூத்த தலை என்றால் நீ கிடையாது, அந்த பட்டு தான் சாகப் போகிறார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அதேசமயம் ஞானம் ரேணுகாவின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து வருகிறார். அப்போது ரேணுகா, “இதற்கெல்லாம் நீ அனுபவிப்படா” என்று சொல்லி சாபம் விடுகிறார். பின்னர் அண்ணன் வரவரை வெயிட் பண்ணு முழு சொத்தையும் நம் ஆட்டையை போட்டு விடலாம் என்று கரிகாலனிடம் ஜான்சி ராணி பேசிக் கொண்டிருக்கிறார். அதை வீட்டில் உள்ள அனைவரும் கேட்டு விடுகின்றனர். அந்த பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV