முடிவுக்கு வந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்.!

வெளியிட்டது

இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் விரைவில் நிறைவடையப் போகிறது இந்த நிலையில் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

முடிவுக்கு வந்த 'எதிர்நீச்சல்' சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்.! 1

கடந்த பிப்ரவரி 7, 2022 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ‘எதிர்நீச்சல்’. ஆணாதிக்கம் மனப்பான்மை கொண்ட வீட்டில் திருமணம் செய்து கொண்டு வரும் படித்த பெண்கள் படும் கஷ்டங்களையும், அவர்கள் எப்படி இதையெல்லாம் எதிர்த்து போராடுகிறார்கள் என்கிற கதையையும் மையமாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் திடீரென ஒரு நாள் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அன்று தொடங்கி இந்த சீரியலின் சரிவு ஆரம்பமானது. அவருக்குப் பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாத அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை விட்டு சென்றிருந்தார் மாரிமுத்து.

அவருக்காகவே ரசிகர்கள் இந்த நாடகத்தை பார்க்க தொடங்கினர் ஆனால் எல்லாம் ஒரு கணத்தில் தலைகீழாக மாறிப்போனது. அவருக்குப் பின்னர் வேல ராம மூர்த்தி, ஆதி குணசேகரனாக நடிக்கத் தொடங்கியதும், சீரியலை பார்ப்பதை பலரும் நிறுத்திவிட்டனர்.

ஆதி குணசூகரன் கதாபாத்திரம் கொடும் வில்லனாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த சீரியல் நெகட்டிவாக மாற ஆரம்பித்தது. ‘எதிர்நீச்சல்’ பெண்கள் மாரிமுத்து விடம் தோற்றுப் போவதை ரசித்துப் பார்த்த ரசிகர்கள், வேலராமமூர்த்தி இடம் தோற்றுப்போவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல் சீரியலை திறந்தாலே ஏதாவது ஒரு பிரச்சனையை மையமாக வைத்து தினமும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.

ஆதிகுணசேகரன் தனது தம்பிகளையும் தம்பி மனைவிகளையும் அவ்வளவு கேவலப்படுத்தும் போதிலும் சுயமரியாதை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவிற்கு ஒரே வீட்டில் இருந்து கொண்டு அவரிடம் கேவலத்தையும் வாங்கிக் கொண்டும், தோற்றுக் கொண்டும், கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பது சீரியல் ரசிகர்களை ஒரு கட்டத்தில் சோர்வடைய வைத்தது.

இது குறித்து ப்ரோமோக்களில் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனருக்கு கதையை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இயக்குனரோ அதை காதில் வாங்கிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆதிகுணசேகரனும், அவரது தாயார் விசாலாட்சியும் போதாக்குறைக்கு தர்ஷனும் பேசும் கீழ்த்தரமான வசனங்கள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

எனவே ரசிகர்கள் ப்ரோமோக்களை கூட பார்க்காமல் அப்படியே நிறுத்தி இருந்தனர். தினமும் வெளியாகும் ப்ரோமோக்கள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வந்த நிலையில், ஒரு லட்சம் பார்வையாளர்களை கூட பெறாமல் ப்ரோமோக்கள் பின்னுக்கு சென்றிருந்தன. இந்த நிலையில் திடீரென பல கதாபாத்திரங்களை உள்ளே புகுத்தி இருந்தார் இயக்குனர்.


‘கோலங்கள்’ சீரியலை எடுத்தது போல் வழவழவென்று ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என இயக்குனர் நினைப்பது தவறு. அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ரசிகர்கள் சேனலை மாற்றிக் கொண்டு சென்று சென்று விடுவார்கள்.

ரசிகர்கள் நல்ல கருத்தான கதைகளையே விரும்புகின்றனர். இதுபோல நெகட்டிவ் சீரியல் மக்கள் மத்தியில் இனி எடுபட போவதில்லை என்று அவரை வசைப்பாடியும் வருகின்றனர். இந்த தொடர் முடிந்த பின்னர் ராகுல் ரவியும், கேப்ரியல்லாவும் இணைந்து நடிக்கும் புதிய தொடர்பான ‘மருமகள்’ ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்