காஷ்மீருக்கு செல்லும் குழுவிலிருந்து வெளியேறிய ஐரோப்பிய பிரதிநிதிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்காது.

காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து புதிதாக அமைக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளிக்கப்படுவார்கள்.

விளம்பரம்

அமெரிக்கா, வியட்நாம், தென் கொரியா, பிரேசில், உஸ்பெகிஸ்தான், நைஜர், நைஜீரியா, மொரோக்கோ, கயானா, அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், நோர்வே, மாலத்தீவுகள், பிஜி, டோகோ, பங்களாதேஷ் மற்றும் பெரு ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.

ஐரோப்பிய தூதர்கள் ஒரு தனி தேதியில் காஷ்மீருக்கு வருவதாக மத்திய அரசுக்கு தெரிவித்ததோடு முன்னாள் முதலமைச்சர்கள் பாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மற்றும் மெஹபூபா முப்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்திக்க வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment