Categories: சமூகம்

போராட்டத்தை கைவிட்ட அரசு மருத்துவர்கள்!!

வெளியிட்டது
போராட்டத்தை கைவிட்ட அரசு மருத்துவர்கள்!! 1

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், தகுதிக்கேற்ற ஊதியங்கள் வழங்க வேண்டும், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்களை உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர்.

இன்று (நவம்பர் 1) காலை 10 மணிக்குள் போராட்டத்துல் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், அந்த இடங்களை காலி இடங்களாக அறிவித்து புதிய மருத்துவர்களை நியமிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தாமல் முதலைமைச்சரும், அமைச்சரும் மிரட்டும் பாணியில் பேசுவதாக விமர்சனங்கள் பல எழுந்தன.

பருவ மழை பெய்து வருவதால் காய்ச்சலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளபோது மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என கோரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவர்கள் கவனித்துவந்தார்கள். இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை ஆகிய போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீஸார் அதிகரிக்கப்பட்டனர்.

போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லக்‌ஷ்மி நரசிம்மன் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். “முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். பருவமழை, புயல் காரணமாக மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்