தமிழ் சினிமாவில் தற்போது விவாகரத்து அதிகரித்து வருகிறது. எதிர்பாராத நட்சத்திர ஜோடிகள் எல்லாம் பிரிந்து வருவது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. தனுஷ் ஐஸ்வர்யா தொடங்கி தற்போது ஜெயம்ரவி ஆர்த்தி வரை விவாகரத்து வந்து நிற்கிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிந்து உள்ளது கடும் அதிர்ச்சியை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தி இருந்தது.

நட்சத்திர ஜோடியாக சினிமாவை வலம் வந்தவர்கள் இவர்கள். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இதுவரை தனது மகளை வெளி இடத்திற்கு இவர்கள் அழைத்து வந்ததில்லை. இப்படி நெருக்கமாகவும் காதலுடனும் வாழ்ந்து வந்த இவர்கள் பிரிவு ரசிகர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அவர்களே தெளிவாக அறிக்கையில் கூறி இருந்தனர்.
இதுகுறித்து பேசிய ஜிவி பிரகாஷ் அம்மா ரெய்ஹானா, சிலர் வாழ்வில் அப்படி ஒரு சூழ்நிலை அமைந்து விடுவதாகவும் , இதுபோன்று நடக்க கூடாது என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள் ஆனால் தவிர்க்க முடியாத நிலையில் இப்படி நடந்து விடுகிறது என கூறி உள்ளார். மேலும் இதுபோன்று யாரும் இனி பிரியா கூடாது என வேண்டிக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.