
கிரிக்கெட் போட்டியில் விளையாட்டு வீரர்கள் பலரும் பலநாட்டு ரசிகர்களையும் வென்றுள்ளனர். அதற்கு மிக முக்கிய வழி வகுத்தது இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் IPL போட்டிகளே காரணம். கிறிஸ் கேயில், ஏ.பி.டிவில்லியர்ஸ், பிராவோ, மலிங்கா, பொல்லார்ட் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான Faf Du Plessis இந்தியாவில் மிக பிரபலம். வலக்கை ஒப்பனிங் பேட்ஸ்மேனான இவர் IPL விளையாட்டுகளில் சென்னை அணியில் விளையாடியதன் மூலம் மிக பெரிய அளவில் தமிழக ரசிகர்களை வென்றார். எப்போதும் சென்னையின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு தனி ரசிகர் பட்டாளங்களும் இருக்கும். அந்த வகையில் இவரும் தேசத்தை தாண்டி இந்திய அளவில் நல்ல ரசிகர் கூட்டங்களை கொண்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளும், 143 ஒருநாள் போட்டிகளும், 50 T20I போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர், இதுவரையில் 11998 ரன்கள் குவித்துள்ள இவர் 2021 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணியில் அதிக ரன் குவித்த வீரராக ஆரஞ்சு கேப் வென்றுள்ளார். சர்வதேச வரையிலான அணைத்து போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள இவருக்கு இன்று 38வது பிறந்தநாளாகும்.