
இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த பனி மூட்டத்தினால் எதிரே வரும் வாகனங்கள் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய செய்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். பனிமூட்டம் காரணமாக 23 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.