“சங்கியான உங்களை நாங்கள் வெறுத்துவிட்டோம்”!! நேரலையில் வந்து இளையராஜாவை கிழித்தெடுத்த ரசிகர்கள்!!

வெளியிட்டது

1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து, தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.இசை உலகின் ஜாம்பவனாக இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் கொடிகட்டி வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை இருக்கிறார்.

"சங்கியான உங்களை நாங்கள் வெறுத்துவிட்டோம்"!! நேரலையில் வந்து இளையராஜாவை கிழித்தெடுத்த ரசிகர்கள்!! 1

பாடல்கள் இசை அமைப்பது மட்டுமின்றி நல்ல பாடகராகவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளவர் இளையராஜா. தமிழிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுக்கு இசை அமைத்துள்ளார். ரஜினி, கமல், மோகன், சத்யராஜ், விஜயகாந்த், விஜய், ராமராஜன், என இவர் இசையில் முன்னணி நடிகர்கள் பாலரும் பெரிய பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராத்தி மொழி படங்களிலும் இவருடைய பாடல்கள் ஒளித்துள்ளன.

கர்நாடக இசை மற்றும் மேலைநாட்டு இசையிலும் கைதேர்ந்தவர்கவே இளையராஜா இருக்கிறார். இவருக்கு பல விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துள்ளன. இந்திய அரசின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் 2010ஆம் ஆண்டு வாங்கினர். மேலும் 5 தேசிய விருதுகளும், 2018ஆம் பத்ம விபூஷண் விருதையும் இவருக்கு அளித்து இந்திய அரசு கவுரவித்துள்ளது. பல விருதுகளும், ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட இவர் அண்மை காலமாக செய்து வரும் செயல்கள் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்காமல் உள்ளது.

ஒரு புத்தக வெளியிட்டு முன்னுரையை எழுதிய இளையராஜா அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதியது மட்டுமின்றி ,  இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா மோடியும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி இருந்தார். அந்த அந்த இளையராஜாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த பேச்சிற்கு பலத்த கண்டனங்கள் எழுந்து இருந்தது. இதனை அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

சமீபத்தில் சோசியல் மீடியா வாயிலாக இளையராஜா ரசிகர்களுடன் உறையடினார். அதில் ரசிகர் ஒருவர் மழைனா போதும் மக்களுக்கு உடனே நினைவிற்கு வருவது சூடான டீ’யும் இளையராஜாவின் பாடல்களுமே. அதற்கு பதிலளித்த,” உங்களுக்கு  ஏதாவது ஒரு சம்பவம் வாழ்க்கையில் நிகழ்ந்தால், அப்போது என் பாடல் தான் உங்களுக்கு நியாபகம் வரும் அல்லது எதாவது ஒரு பாட்டு நியாபகம் வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் அந்தப் பாடலுடன் கனெக்ட் ஆகும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வேற வழி இல்லை” என்று அவர் கூறி இருந்தாலும், அதில் கொஞ்சம் திமிர் தெரிவதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள் அந்த பதிலிற்கு.

இப்படி இளையராஜா தனது ரசிகர்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கும் போது அதில் ஒருவர் ‘தாங்கள் நன்றாக  இசை அமைத்தாலும் தற்பெருமை அதிகம் கொண்டவராக தெரிகிறீர்கள், ஒரு பாடல் உருவாக பாடல் எழுதியவர், பாடியவர், இசையமைத்தவர் என மூன்று பேருக்குமே சரி சமமான பங்கு உள்ளது. ஆனால் நீங்கள் திரு.SPB’யை உங்கள் பாடல்கள் பாட கூடாது என நோட்டீஸ் அனுப்பினீர்கள். அது அவருக்கு எவ்வளவு மனவருத்தம் கொடுத்திருக்கும் என எப்போதாவது யோசித்தது உண்டா?” என கொஞ்சம் காட்டமாகவே கேள்விகளும் கேட்க பட்டது. இந்த உரையாடல் வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது.சில ரசிகர்கள் இவரை சங்கி எனவும் கூறியுள்ளார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்