Categories: சினிமா

“அடுத்தடுத்த ஐ.டி. ரைட்”!!”கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்”

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் தற்போது மிக பெரிய பூகம்பத்தை கிளம்பியுள்ள விஷயம் தொடர்நது அடுத்தடுத்த தயாரிப்பாளர்கள் இல்லத்தில் நடைபெறும் ஐ.டி. ரைட்டுகள். முதலில் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் அலுவலகத்தில், அடுத்து வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு இல்லத்தில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதுவே தயாரிப்பாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த இப்பொது ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா அலுவலகத்திலும், ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இல்லத்திலும் ரைட் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

"அடுத்தடுத்த ஐ.டி. ரைட்"!!"கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்" 1

ஒரு திரைப்படம் வெளியில் ஒரு இயக்குனராலோ இல்லை நடிக்கறாலோ பெரிய அளவில் பெயர் வாங்குவதாக இருந்தாலும், அந்த படத்தின் உருவாக்கத்திற்கு முக்கிய மைய புள்ளி அதன் தயாரிப்பாளராகளே. பெரிய பெரிய பொருட்செலவில் திரைஉலகினை முன்னிற்கு கொண்டு சென்றுள்ள பல சிறப்பான தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். அண்மை காலமாக நிறைய படங்கள் தோல்வி அடைவதும், நடிகர்கள் அளவுக்கு மிஞ்சிய அளவில் சம்பளம் கேட்பதும், இயக்குனர்கள் தேவையற்ற செலவுகள் பலவற்றை செய்து வருவதாலும் நிறைய தயாரிப்பாளர்கள் கொஞ்சம் நொடிஞ்சி போயுள்ளார்கள் என்பதே நிதர்சன உண்மை.

இப்பொது தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களாக இருப்பது தாணுவின் வி கிரியேஷன்ஸ்,  அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, லைக்கா நிறுவன சுபாஸ்கரன், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் என சிலவற்றையே. பெரும்பாலும் இன்றைய பொழுதுகளிலில் வெற்றியடையும் படங்கள் இவர்கள் நிறுவனம் சார்ந்தே இருக்கும்.

நடிகர்கள் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் நானே வருவேன், சூர்யாவின் வணங்கான், சிம்புவின் வெந்து தணிந்தது காடு, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், போன்ற அடுத்தடுத்த மிக பெரிய படங்கள் இவர்கள் சார்பில் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இப்பொது அடுத்தடுத்து ஐ.டி ரைடுகளில் மொத்த தயாரிப்பாளர்களும் கொஞ்சம் கலக்கத்தில் தான் இருக்கிறார்கள். இவர்கள் நால்வரை தொடர்ந்து அடுத்து யாருடைய அலுவலகங்களில் ரைட் நடக்கும் என தெரியாமல் நிறைய பேர் தவித்து வருகிறார்கள்.

ரைடுகள் மட்டுமே நடத்தப்பட்டு வரும் வேலையில் இப்பொது வரையில் இவர்கள் இல்லத்தில், அலுவலகத்தில் என்னென்ன மாதிரியான விஷயங்கள் கைப்பற்றப்பட்டன எந்த புகார்களில் சிக்கியுள்ளார்கள் என்ற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்