Categories: சினிமா

“இனிமே அப்பாவ பாத்துலாம் பயப்படமாட்டேன்….அடிச்சி நொறுக்கிடுவேன்”!! ஆக்ஷன் அவதாரத்தில் ஜெய்யின் “எண்ணித்துணிக” ட்ரைலர்”!!

வெளியிட்டது

சிலருக்கு சினிமாவில் சிறிய வயதிலேயே கிடைத்து மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்த பின்னும், அடுத்தடுத்த அதற்கேற்ப வெற்றி படங்கள் அமையாமல், தடுமாறிப்போவார்கள். சிலருக்கு வெற்றி படங்கள் அமைந்தும், அதன் மூல தன்னை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருவார்கள். இது சினிமாவிலுள்ள பலருக்கும் பொருந்தும். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இனிமே அப்பாவ பாத்துலாம் பயப்படமாட்டேன்....அடிச்சி நொறுக்கிடுவேன்"!! ஆக்ஷன் அவதாரத்தில் ஜெய்யின் "எண்ணித்துணிக" ட்ரைலர்"!! 1

இந்த இரண்டு அடைப்படியிலுமே பொருந்தும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் ஜெய் மட்டுமே. முதலில் விஜயுடன் அவருக்கு தம்பியாக “பகவதி” படத்தில் நடித்து இருந்தார். நடிகர் விஜயின் சாயல் நிறைய இருக்கவே அந்த சமயத்தில் இவர் உண்மையில் விஜயின் சொந்தம் எனவே பலரும் நினைத்து வந்தனர். போக போக இவரே விஜய் போலவே மாற துவங்கினர்.

துணை கதாபாத்திரத்தில் தோன்றினாலும், பின்னர் வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான “சென்னை 28” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன் பின் இயக்குனர் சசிகுமார் அறிமுகமாகும் “சுப்ரமணியப்பபுரம்”. படம் வெளிவரும் போது அதில் பெரிய நட்சத்திரங்கள் என்றால் ஒன்று ஜெய் மற்றொன்று காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. சசிகுமார், சமுத்திரக்கனி என இப்போதைய பெரிய நடிகர் முகவரி இல்லாமல் ஜெய்யுடைய முகவரியுடன் வெளியான இந்த படம் சக்கை போடு போட்டது.

குறிப்பாக படத்தில் இடம் பெரும் கண்கள் இரண்டால் பாடலும் அதில் ஜெய் செய்யும் mannerism இன்றளவும் ரசிகர்களுக்கு மிகவும் பிரதிசயமான ஒன்றாக, அவளோ பெரிய பேமஸ் அனைத்து. இந்த படத்தின் வெற்றி அவரை அடுத்தடுத்த படங்களில் நாயகனாகியது. ஆனால் பெரிதாக எந்த ஒரு படமும் பெரிய வெற்றியை அடையவில்லை. நடுவில் இவர் நடித்த “எங்கேயும் எப்போதும்” படம் மட்டும் கொஞ்ச நல்ல பெயரையும், வசூலையும் எடுத்தது. மற்ற படி இவரின் அணைத்து படங்களுமே வருவதும் தெரியாமல் தோல்வி படங்களாக அமைந்தது.

இவருக்கு ஒரு தனி ரசி இருக்கிறது. முக்கிய நாயகனாக இல்லாமல் வேறொரு நாயகனுடன் இவர் இணைந்து நடித்தால் படம் நிச்சயம் வெற்றி பெற்று விடுகிறது. அந்த வகையில் “கோவா, ராஜா ராணி, சென்னை 28-2, என பல படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது. குறிப்பாக வெங்கட் பிரபு ஜெய்யுடன் படம் இணைந்தால் அது நிச்சயம் வெற்றி படமாகவே அமைகிறது.

 

தற்போது ஜெய் நடிப்பில் ஆக்ஷன் படமொன்று தயாராகி வருகிறது. ஜெய், அதுல்யா ரவி, வித்யா பிரதீப் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ்.கே.வெற்றி செல்வன் இயக்கத்தில் ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஆக்ஷன் நாயகனாக மாறியுள்ளார் ஜெய். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Video Courtesy – Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்