சமீபகாலமாக அனைவரும் ரசித்து கேட்ட பாடல் என்றால் அது அரபிக் குத்து தான். பீஸ்ட் படத்தில் வந்த அந்த பாடலை பாடியவர் ஜோனிடா காந்தி. அனிருத் இசையில் அமைந்திருந்த அந்த பாடலை எழுதியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஜோனிடா காந்தி அடிப்படையில் ஒரு இந்தோ – கனடிய பாடகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்கில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜோனிதா பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதுண்டு. இதனால் இவரை பின்தொடர்பவர்கள் அதிகம். கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் 7 வயதாக இருக்கும் போதே கனடா சென்றுவிட்டார். ஆனாலும் அங்கிருந்தபடியே இசையைக் கற்றுக் கொண்டு இசைக் கலைஞராக வலம் வந்தார். முதலில் இவர் தான் பாடிய பாடல்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் சென்னை எக்பிரஸ் என்னும் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே இவர் திரை உலகில் பாடகியாக அறிமுகம் ஆகும் வாய்ப்பை இவருக்கு கொடுத்தது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு ஹிந்தி பாடலை பாடினார். பின்னர் ஓகே கண்மணி படத்தில் பாடலைப் பாடினார். பின்னர் அனிருத் இவருக்கு பல படங்களில் பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். இறைவா, செல்லம்மா செல்லம்மா, அரபிக்குத்து போன்ற பாடல்கள் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. இதனால் இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிக்கும் வாக்கிங் டாக்கிங் ஸ்டராபெரி ஐஸ்கிரீம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜோனிடா ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் வசீகரா பாடலை பாடினார். செம்மா க்யூட்டாக உள்ள அவரின் அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..Watch the Below video..
Video Courtesy: Behindwoods