Categories: சினிமா

அரிவாளால் வெட்டிவிடுவேன் என மிரட்டும் பயில்வான்..அசராமல் பதிலடி கொடுத்த கே.ராஜன்

வெளியிட்டது

பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து உள்ளவர். 1980 முதல் இப்பொது வரை சிறு சிறு வேடங்களில் கவுண்டமணி,செந்தில்,வடிவேலு,ரஜினி, விஜய் என பல நடிகர்களுடன் நடித்து உள்ளார். வீடியோ லிங்க் கீழே.

குறிப்பிடும் படியான கதாபாத்திரங்கள் அமையாததால், இப்பொது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் தனியாக யூடூப்பில் நடிகர் நடிகைகளை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் மறைக்கபட்ட சினிமாவின் உண்மை முகத்திரையை பற்றி தன நன் பேசி வருகிறேன், இதில் ஒன்றும் தவறில்லை என்றும் அதற்கு விளக்கமும் கூறி வருகிறார்.

அரிவாளால் வெட்டிவிடுவேன் என மிரட்டும் பயில்வான்..அசராமல் பதிலடி கொடுத்த கே.ராஜன் 1

இந்த நிலையில் சில நாட்கள் முன்பு தன்னுடைய யூடியூபில் நடிகை ராதிகா, கீர்த்தி சுரேஷ் பொன்றை பற்றி மிகவும் கேவலமாக பேசி பதிவிட்டு இருந்தார். இதனை பற்றி தனியார் பேட்டியில் கேள்வி எழுப்பிய போது, எனக்கு யாரிடமும் பயம் இல்லை, நான் தூத்துக்குடி காரன், என்னிடம் யாராவது வம்பு செய்தல் வெட்டி விடுவேன் என திமிராக பதிலதித்துள்ளார். இதற்கு பல்வேறான எதிர்ப்புகள் கிளம்பியது.

இப்போது அவருடைய பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் சென்னை காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் பயில்வானை கைது செய்யும் படி புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அவதூறா பேசிட்டு, எவ்ளோ தைரியமா ஊடகத்தில் கேள்வி கேட்ட வெட்டிடுவேன்னு சொல்றாரு, இது தவறு இல்லையா?, இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது நிறைய நடிகர், நடிகைகள் கூட அவர் மேல் புகார் கொடுத்துருக்காங்கனு, காவல் துறை நிச்சயம் இந்த மாதிரி பேசி வரும் அவரை கைது செய்யும் என நம்புகிறேன் என கூறினார்.

 

Video Courtesy – itamilnews

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்