கயல் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிரபு கொலை வழக்கில் போலீசார் தனது தங்கையை நெருங்கினால் நான்தான் கொலை செய்தேன் என்று சொல்லி சரண்டர் ஆக தயாராக இருப்பதாக தற்போது கயல் ஆனந்தியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். நிலைமை இப்படி ஒரு புறம் இருக்க கயலின் தம்பியை மிரட்டி கஞ்சா கடத்துவதற்கு ரவுடிகள் ஒரு பக்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். வீட்டில் வைத்தே கஞ்சா பொருட்களை கடத்திக் கொண்டிருக்கும் கயலின் தம்பியை கயல் பார்த்து விடுவார் என்று தெரிகிறது. இதனால் என்ன நடக்கும் என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. கயலும் ஆனந்தியும் இணைந்து பிரபுவின் உடலை புதைத்து வைத்திருக்க போலீசார் நாளுக்கு நாள் விசாரணையில் கயல் மற்றும் ஆனந்தியை நெருங்கி வருகின்றனர். அடிக்கடி இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டால் இவர்கள் இருவரும் கண்டிப்பாக மாட்டுவார்கள் என்கிற கருத்து எழுந்துள்ளது. போலீசார் விசாரணை வளையத்தை நெருங்கிக் கொண்டே வருவதால் விரைவில் இருவரில் ஒருவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கயல் தனது தங்கை ஆனந்தியிடம் நீ ஒன்றும் கவலைப்படாதே, அப்படி போலீஸ் உன்னை நெருங்கினால் அந்த கொலையை செய்தது நான் தான் என சொல்லி நான் சரண்டர் ஆகிறேன் என கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv