Categories: சினிமா

பெற்றோர்களின் பிறந்தநாளை கேரளாவில் வைத்து குடும்பத்துடன் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.!

வெளியிட்டது

தனது தாய் தந்தை பிறந்தநாளுக்கு கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று கீர்த்தி சுரேஷ் வழிபாடு நடத்தியுள்ளார்.

பெற்றோர்களின் பிறந்தநாளை கேரளாவில் வைத்து குடும்பத்துடன் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.! 1

அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘ரஜினி முருகன்’ தான். இந்த படத்தின் மூலமாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.

தமிழை விட தெலுங்கில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றனர்.கடைசியாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் கடைசியாக இவர் நடித்திருந்த படம் ‘போலோ சங்கர்’. ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது கைவசம் ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊரான கேரளாவுக்கு சென்ற அவர் தனது 10 ஆண்டு திரை வாழ்க்கையை கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். மேலும் தனது பெற்றோர்களின் பிறந்தநாளுக்கு கோவில்களுக்கு சென்ற புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்