Categories: சினிமா

குஷ்பூவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்.! வைரலாகும் புகைப்படம்.!

வெளியிட்டது

80, 90களில் முண்ணனி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 1986ம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பூ. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடத்துள்ளார். இவருக்கு இவரது ரசிகர்கள் கோவில் வரை கட்டியுள்ளனர். சென்னையில் இவர் பெயரில் கிடைக்கும் குஷ்பூ இட்லி மிகப் பிரபலம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் 2000ம் ஆண்டு பிரபல இயக்குனநர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திதா, அனந்திதா என்ற இரு மகள்கள் உண்டு.

குஷ்பூவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்.! வைரலாகும் புகைப்படம்.! 1

இவர்கள் இருவரும் குஷ்பூவைப் போலவே உடல் தோற்றத்தில் இருந்ததால் கடுமையாக உருவக்கேலி செய்யப்பட்டனர். அவ்வாறு கிண்டலடிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தார் குஷ்பூ. தற்போது இவர்கள் இருவரும் உடல் எடையை குறைத்து வேற லெவலில் மாறியுள்ளனர். மகள்கள் உடல் எடையை குறைத்ததை பார்த்த குஷ்பூவும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார். குஷ்பூவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இது குஷ்பூதானா என்று கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் குஷ்பூவின் மகள் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அவரின் மூத்த மகளான அவந்திகா லண்டனில் உள்ள நடிப்பு பள்ளியில் படித்து வருகிறார்.

இது குறித்து குஷ்பூ சமீபத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் என்னுடைய மூத்த மகள் லண்டனில் உள்ள நடிப்பு பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். அவருடைய உண்மையான கஷ்டம் தற்போதிலிருந்து தொடங்குகிறது. அவளுக்காக நாங்கள் எங்கும் பரிந்துரை செய்ய போவதில்லை. உங்களுடைய ஆசீர்வாதம் அவளுக்கு தேவை என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சினிமாவில் அறிமுகமாக உள்ள அவரின் மகளின் புகைப்படம் ஒன்றை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை அன்பால் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்று அவர் தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசல் குஷ்புவின் இளம் வயது தோற்றம் போலவே அவரது மகள் இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்