Categories: சினிமா

“நெனச்சத அடஞ்சிட்டேன்….நம்பி நாராயணனை போல வேடமிட்ட குழந்தை”!! நெகிழ்ந்த மாதவன்”!!

வெளியிட்டது

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” படம் மூலம் தமிழில் நீண்ட நாட்கள் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகர் மாதவன். படத்தை ஹிந்தியில் மொழிமாற்றி வெளியிட்ட இரண்டு மொழிகளிலும் பல நல்ல வெற்றியை பெற்றது. இதனை மூலம் துவண்டு போயிருந்த தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு மீதும் புத்துணர்ச்சி கிடைக்க அடுத்தடுத்த படங்களில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நெனச்சத அடஞ்சிட்டேன்....நம்பி நாராயணனை போல வேடமிட்ட குழந்தை"!! நெகிழ்ந்த மாதவன்"!! 1

விஜய் சேதுபதியுடன் நடித்த “விக்ரம் வேதா” மிக பெரிய வெற்றி படமாக அமைய, தமிழில் இவருக்கு மீண்டும் நல்ல மார்க்கெட் உருவானது. ஆனால் அடுத்தடுத்த படங்களை நடிக்காமல், தன்னுடைய சொந்த படம் எடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார். இவரே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் தான் “ராக்கெட்டரி : தி நம்பி எபெக்ட்”.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார் மாதவன். படத்தில் அவர்க்குக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். கௌரவ வேடங்களில் இந்தியில் ஷாருக் கானும், தமிழில் சூர்யாவும் நடித்துள்ளனர். படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி “பான் இந்தியா” வெளியீடாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மிக தீவிரமாக இறங்கியுள்ளனர். மாதவன் பல்வேறு பேட்டிகளும், செய்தியாளர்கள் சந்திப்புகளும் கொடுத்து வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் இந்த படத்திற்கு 10 நிமிடம் எழுந்து நின்று கைதட்டி படம் பார்த்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை இந்திய பிலிம் பேர் சம்மேளனம் பகிர்ந்து தங்களுடைய வாழ்த்துக்கள் படத்திற்கு தெரிவித்தது.

நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய படத்திற்கு மாதவனே தன்னுடைய வாயால் “பஞ்சாங்கம்” பற்றி தவறுதலாக பேசி நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற ஊக்குவித்தார். நிறைய ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்ஸுகளால் பயங்கரமாக கலாய்க்க இப்பொது மீண்டும் அதற்கு மாதவன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இது படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை எந்த வகையிலும் குறைத்திடவில்லை.

படம் வெளியாகி விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக திரு. நம்பி நாராயணனை பற்றி அறிந்திடாத பலரும் அவரை குறித்து இப்பொது தெரிந்து கொண்டு, அவர் இந்த பாரததேசத்திற்கு செய்த அரிதான செயல்களை மெச்சி வருகிறார்கள். இது மிகவும் பாராட்டிற்கு கூறிய விஷயம். இதனை கருத்தில் கொண்டே இயக்குனர், நடிகர் மாதவன் இந்த படத்தை எடுக்கவிரும்புவதாக பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.

பெரும்பாலும் பெரிய பெரிய தேச தலைவர்கள், சினிமா நடிகர்கள் போன்றே வேடமிட்டு குழந்தைகள் fancy dress competition-இல் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் நாட்டிற்கு செயற்கரிய செயல்களை ஆற்றிய நம்பி நாராயணன் போல வேடமிட்டு பேசியுள்ளார். இதனை மாதவன் மிகவும் நெகிழ்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Video Courtesy – Celebrities Viral Videos

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்