பிறந்த நாளுக்காக தனது கணவர் தனக்கு அளித்த சர்ப்ரைஸ் உடன் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மகாலட்சுமிக்கு கேக் வெட்டி அதை ஊட்டி, பிறந்தநாள் பரிசுகளையும் வழங்கி அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் ரவீந்தர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

அதை தொடர்ந்து தற்போது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை மகாலட்சுமி. 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அரசி என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர் நடிகை மகாலட்சுமி. இவர் சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு வைரலான ஒரு திருமணம் என்று சொன்னால் அது ரவீந்தர் மகாலட்சுமி திருமணம்தான். திருமணம் முடிந்து இவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த போது பலராலும் உருவக் கேலி செய்யப்பட்டனர்.
இருந்த போதிலும் மனம் தளராமல் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தம்பதிகள். அந்த வகையில் நேற்று மகாலெட்சியின் பிறந்தநாள் கொண்டாட்டம் வீட்டிலேயே மிக எளிமையாக நடைபெற்றது.
மகாலட்சுமியின் திருமண நாளிற்காக நீண்ட கவிதை ஒன்றை எழுதி மனைவியை வாழ்த்தியிருந்தார் ரவீந்தர். பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள், அவளின் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பரிசுகள் எதுவும் தராமல் மல்லிப்பூ வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி ரொமாண்டிக் கவிதைகளையும் எழுதியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த மகாலெட்சுமி, இந்த பூவை விலையுயர்ந்த ஒன்று, ஒரு கணவனால் மட்டுமே பூவை பரிசளிக்க முடியும், ஐ லவ் யூ அம்மு என பதில் அளித்திருந்தார் மகாலெட்சுமி.
தற்போது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை மகாலட்சுமி. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O