விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் காவேரியுடன் நிவின் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். நிவினுக்கு மட்டும் திருமண ஏற்பாடுகள் நடக்கவில்லை என்றால், நீ நிவினை தானே திருமணம் செய்து கொண்டிருப்பாய்? என்று விஜய் கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாத காவிரியில் அப்படியே உடைந்து போய் அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் இருந்தபோது நிவினும் காவேரியும் காதலித்து வந்தனர். ஆனால் நிவினுக்கு வேறு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், மனமுடைந்த காவேரி மற்றும் குடும்பத்தினர் கொடைக்கானலில் இருந்து வெளியேறி வேறு ஊருக்கு செல்கின்றனர். அங்கு காவேரியை விஜய் ஒரு வருட ஒப்பந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்து இருவரும் கணவன் மனைவிகளாக வாழவே இல்லை. இருந்த போதும் விஜயின் தாத்தா கூறியதால், காவேரியை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு வந்திருக்கிறார் விஜய் அங்கு இருவரும் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது விஜய் காவேரியின் முன்னாள் காதல் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். நிவினுக்கு மட்டும் திருமண ஏற்பாடுகள் செய்யாமல் இருந்தால், நீ அவரை தானே திருமணம் செய்து கொண்டிருப்பாய்? என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாத காவேரி மனம் உடைந்து போய் அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television