காவேரியை வார்த்தைகளால் காயப்படுத்திய விஜய்.! கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய காவேரி

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது காவேரி மற்றும் விஜய் இடையே சண்டை வருகிறது. காவேரி ஒரு வருட ஒப்பந்தத்தை இப்போது முடித்துக் கொள்கிறேன்.  என்னை விட்டு விடுங்கள், நான் செல்கிறேன் என கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் மனம் உடைந்த விஜய் அதிர்ந்து போகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரியை வார்த்தைகளால் காயப்படுத்திய விஜய்.! கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய காவேரி 1

விஜய்க்கும் காவேரிக்கும் ஒரு வருட ஒப்பந்தத்தில் திருமணம் நடைபெறுகிறது. விஜயின் சித்தப்பா மகனாக இருக்கும் அஜய்க்கும், காவேரியின் பரம எதிரியாக இருக்கும் பசுபதியின் மகள் ராகிணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. நிச்சயதன்று போலீசாரை வரவழைத்து கொடைக்கானலில் தன்னை பசுபதி கடத்திய விஷயத்தை சொல்லி அவரை கைது செய்ய வைக்கிறார் காவேரி. இதனால் திருமண நிச்சயதார்த்தம் நின்று போகிறது. தொடர்ந்து வீட்டில் பிரச்சனைகள் வெடிக்கிறது.

தாய், தந்தை இல்லாத விஜயை அஜயின் தாய் தான் பிள்ளை போல் நினைத்து வளர்த்தார். ஆனால் விஜய் காவேரியுடன் சேர்ந்து கொண்டு இப்படி செய்து விட்டதாக அவரது சித்தி குற்றஞ்சாட்டிய நிலையில், விஜய்க்கு அது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இது குறித்து காவேரியிடம் அவர் சண்டை போடுகிறார். அப்போது காவேரி எனக்கு இந்த ஒரு வருட ஒப்பந்தமே வேண்டாம். நான் இப்போதே கிளம்புகிறேன். என்று சொல்லி வீட்டில் இருந்து வெளியேறுகிறார் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..! 

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்