தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகள் மேல் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலுள்ள முக்கிய நாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது ஹிந்தியில் ஷாருக் கான் நடிக்கும் “ஜவான்” படத்தின் மூலம் அங்கும் அறிமுகமாக உள்ளார். 35 வயதை தாண்டிய அவருக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்களின் காதல் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.9 ஆம் தேதியான நாளை விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருப்பதியில் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் 150 பேர் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி மறுத்தது.
இதனால் திருமணத்தை மகாபலிப்புரத்தில் நடத்த விக்கி நயன் ஜோடி முடிவு செய்தது.தங்களின் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட 200 பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திருமணத்தை ஒளிபரப்ப ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் மெஹெந்தி ஃபங்க்ஷனில் கலந்து கொள்பவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் கூட தங்களுடைய புகைப்படங்களை பொருத்தி பாட்டில் வழக்கப்பட்டு வருகிறது. முக்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருமண விழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது.
தற்போது நயன் – விக்கி திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் திருமணம் நடக்கும் இடம், நேரம் ஆகியன குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் விருந்தினர்களுக்கு ட்ரெஸ் கோடும் அந்த பத்திரிகையில் இருக்கிறது. Ethnic pastels தான் விருந்தினர்கள் அணிந்து வர வேண்டிய ட்ரெஸ் கொடு.
நாளை காலை நடைபெறவுள்ள இவர்களது திருமண விழாவை எதிர்நோக்கி பல ரசிகர்களும், ஊடகவியாளர்களும் காத்து உள்ளனர். வருகிற ஜூன் 11 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷும் நடிகை நயன்தாராவும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்போம் என நேற்று நடைபெற்ற சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.