
கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பிய படம் “திரௌபதி”. நடிகர் அஜித்தின் சொந்தக்காரர் ரிச்சர்ட் நாயகனாக நடிக்க, உடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அழகிய தமிழ் மகள்”, மலையாளத்தில் மிக பெரிய ஹிட் அடித்த பகத் பாசிலின் “கும்பலாங்கி நைட்ஸ்” போன்ற படங்களில் நடித்திருந்த நடிகை ஷீலா நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரத்தில் கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் வெளியாகிய உடனே நிறைய சர்ச்சைகளை கிளப்பியது.
அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது படத்தில் அதிகமாக பேசப்பட்ட ஜாதிய அரசியலும், கதைக்களம் முழுக்க முழுக்க அதனை சுற்றியே உளவியதுமே ஆகும். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் இதற்கு முன் இயக்கிய படம் “பழைய வண்ணாரப்பேட்டை” படம். இதுவும் வெளியான பொது கொஞ்சம் சர்ச்சைகளையே கிளப்பியது. பின்னர் “ருத்ர தாண்டவம்” என்ற படம் இதே ரிச்சர்ட் நடிக்க உடன் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்க இன்னும் கொஞ்ச அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது.
இப்பொது இயக்குனர் மோகன் ஜி, நடிப்பில் களமிறங்கியுள்ள இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து “பகாசுரன்” என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்த படங்களில் இவர் எந்த மாதிரியான கதைக்களங்களில் படம் இயக்க போகிறார் என்ற ஆர்வம் பொதுவெளியில் நிறையவே தெரிகிறது.
அண்மை காலமாகவே நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் திரைத்துறையையே சார்ந்த பலர் பெயர்களில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு அதன் மூலம் பண மோசடிகள் பல நடந்து வருகின்றன. அதில் ஒரு பங்காக இப்பொது இயக்குனர் மோகனும் மாட்டியுள்ளார். அவருடைய பெயரில் அவசரமாக 10000 வேண்டும் என அறிந்தவர்களுக்கு மெசேஜ் செய்து பணம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இதனை அறிந்து கொண்ட இயக்குனர் மோகன், தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, இது போன்று இனிமேல் யாரும் ஏமாற வேண்டாம் என எழுதி அந்த மெசேஜ் போன்றவற்றை பகிர்ந்துள்ளார்.