மல்லிகா புடைவைக்கு தீ வைக்க முயன்ற காதம்பரி.! சரியான நேரத்தில் வந்த சக்தி.! தெறி ப்ரோமோ.!

வெளியிட்டது

மௌன ராகம் தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் நடந்து வருகிறது. காதம்பரி மீண்டும் கார்த்தியின் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு வந்து மல்லிகா சமையல் அறையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அவரின் புடவையை நெருப்பில் காட்ட காதம்பரி முயற்சி செய்கிறார். அதை சொர்ணமும் சக்தியும் சேர்ந்து பார்த்துவிட்டனர். அந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்றுதான் மௌன ராகம். இதில் கதாநாயகன் கார்த்திக்கு இரண்டு மனைவிகள். அதில் மூத்த மனைவிதான் மல்லிகா. இரண்டாவது மனைவி காதம்பரி. இதில் மூத்த மனைவி இறந்து விட்டதாக நினைத்து அவர் காதம்பரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வார். ஆனால் மூத்த மனைவி ஒரு கிராமத்தில் தனது மகள் சக்தியுடன் வசித்து வருவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மல்லிகா புடைவைக்கு தீ வைக்க முயன்ற காதம்பரி.! சரியான நேரத்தில் வந்த சக்தி.! தெறி ப்ரோமோ.! 1

ஒரு கட்டத்தில் கிராமத்தில் இருந்து சக்தி தனது தந்தையை தேடி சென்னைக்கு வர பின்னர் அந்த குழந்தை கார்த்திக் வீட்டிலேயே தஞ்சம் அடைகிறது. அந்த குழந்தை தன்னுடைய குழந்தை தான் என்பதை தெரிந்துகொள்ளும் கார்த்திக், அதற்கு பரிவு காட்டி வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் மல்லிகாவும் உயிருடன் இருக்கும் விஷயம் கார்த்திக்கு தெரிய வருகிறது. பின்னர் மல்லிகாவுக்கும் காதம்பரிக்கும் சண்டை தொடங்குகிறது. மல்லிகா குடும்பத்தை எப்படியாவது பழி வாங்கி அவர்களை கார்த்திக்கிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று காதம்பரியும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து திட்டம் தீட்டி வருகின்றனர். அத்துடன் சீசன் 1 முடிந்தது. இந்த நிலையில் தற்போது மௌன ராகம் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது இந்த கதையில் சக்தி வளர்ந்து வருண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வருணின் தம்பி தருணை காதம்பரியின் மகள் ஸ்ருதி திருமணம் செய்து கொண்டார். இதனால் கதை இன்னும் சுவாரசியமாகி கொண்டே வந்தது.

இந்த நிலையில் கார்த்திக் காதம்பரி செய்யும் மோசமான செயல்களை தெரிந்து கொண்டு அவரை குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தார். தற்போது கதைப்படி கதம்பரியின் தந்தை விஸ்வநாதன் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். எனவே காதம்பரியும் அவரது தாய் ருக்மணியும் தனி மரம் ஆகிவிட்டனர். இதனால் மீண்டும் கார்த்திக்குடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து கார்த்திக் வீட்டுக்கு காதம்பரி செல்கிறார். அங்கு செல்லும் காதம்பரி, மல்லிகா சமையல் அறையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அவரின் புடவையை நெருப்பில் காட்ட முயற்சி செய்கிறார். அதை சொர்ணமும் சக்தியும் சேர்ந்து பார்த்துவிட்டனர். அந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்