லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தனியார் ரெசார்ட்டில் மிக பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. சினிமா பிரபலங்களும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்ற இந்த திருமண நிகழ்ச்சி தான் சென்ற ஒரு வாரமாக அனைத்து செய்திகளின் முதன்மையானவை.

2005 ஆம் ஆண்டு சரத்குமாரின் “ஐயா” படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விஷால், சிம்பு என முன்னணி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அங்கிருக்கும் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து சில காலங்களிலேயே தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக மாறினார். மலையாளத்தில் அவ்வப்போது பெரிய நாயகர்களுடன் மட்டும் நடித்து வந்தார்.
அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இவர் முன்னணிக்கு உயர முக்கிய காரணம் படங்களில் இவர் காட்டிய கிளாமர் தான். பெரிய நடிகர், சிறிய படம் என எந்தவித பாகுபாடும் காட்டாமல் அனாவசியமாக கிளாமர் நாயகியாக நடித்து வந்தார். பின்னர் நடனம் இயக்குனர் பிரபுதேவா மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் சினிமாவை விட்டு விலகி இருந்த இவரை இயக்குனர் அட்லீ ராஜா ராணி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின், வரிசையாக நானும் ரவுடி தான், கோலமாவு கோகிலா, மாயா, விசுவாசம் என வெற்றி படங்களில் கிளாமர் கொஞ்சமும் இன்றி, நடிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தொடர் வெற்றிகளை பெற்றார். முற்றிலுமாக அந்த வழக்கத்தை தன்னுடைய படங்களில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டார்.
பலரும் திருமணம் முடிந்த பின் அவர் நடிப்பதை கொஞ்ச காலமாவது நிறுத்திவிடுவார் என பலரும் பேசி வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தான் நடிப்பதையெல்லாம் நிறுத்தவோ? இல்லை ஒதுக்கிவைக்கவோ இல்லை? என பதிலளித்துள்ளார், கூடவே 2 புதிய கட்டுப்பாடுகள் போட்டுள்ளார். இப்பொது திருமணம் முடிந்துள்ளதால், ஏற்கனவே வைத்திருக்கும் கண்டிஷன்களுடன் இன்னும் கூட்டியுள்ளார்.
அதாவது இனிமேல் இவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக எந்த வித நெருக்கமான காட்சிகளோ இல்லை கிளாமர் காட்சிகளில் தான் நடிக்கப்போவதில்லை என்ன கூறியுள்ளார். அதே போல இப்பொது திருமணம் முடிந்துள்ளதால் ஒரு படத்திற்காக தொடர்ச்சியாக கால்ஷீட்கள் ஒதுக்க முடியாது. பிரித்து பிரித்து இடைவெளிகளிடன் தான் கொடுக்க முடியும் என இன்றொரு கண்டிஷனும் சேர்த்துள்ளாராம்.
நெருக்கமான காட்சிகள் இல்லை என்பது நியாயமான ஒன்றே ஆனால், அடிக்கும் பொது அவ்வப்போது இடைவேளை விட்டு நடிப்பது, படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு கொஞ்சம் மனக்கசப்பை கொடுக்கும் என்பதில் எந்த வித மறுத்தாலும் இல்லை. இவர் இப்பொது அட்லீயுடன் ஹிந்தியில் ஷாருக் கான் ஜோடியாக “ஜவான்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.