Categories: சினிமா

இரட்டை மகன்களுடன் வெளிநாட்டில் நடிகை Nayanthara விடுமுறை கொண்டாட்டம்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா. சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்து உள்ளார்.

இரட்டை மகன்களுடன் வெளிநாட்டில் நடிகை Nayanthara விடுமுறை கொண்டாட்டம்..! 1

தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது.

இவருக்கு அடுத்ததாக டெஸ்ட் படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நயன்தாரா.

தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடனும் அடிக்கடி நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளனர்.

அங்கு மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்