தமிழின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. அவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் நடந்த இவர்களது திருமண விழாவில், அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அலைபேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

இவர்களது திருமணம் லைவ் ஆக ஒளிபரப்பு செய்யவில்லை. தனியார் OTT தளத்திற்கு ஒளிபரப்பிற்காக விற்கப்பட்டது. அதனால் இவர்களது திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் வெளியே வரவில்லை. திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்று சாமி தரசினம் செய்துவிட்டு பின்னர் கொச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் தாய்லாந்தில் ஹனிமூனுக்கு சென்றனர். ஒரு மாதமாக திருமணம், ஹனிமூன், சாமி தரிசனம் என்று பிஸியாக இருந்ததால் படபிடிப்புகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. தற்போது அட்லி இயக்கும் ஹாலிவுட் படமான ஜவானில் ஹீரோயினாக நடக்க உள்ளார். ஹிந்தியில் இது இவருடைய முதல் படமாகும்.
திருமணநிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் இயக்குனர்கள் அட்லீ மற்றும் மணிரத்னம் ஆகியோரின் இதுவரையில் வெளிவராத புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது மகனையும் அழைத்து கொண்டு அவர் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரை பார்த்த விக்னேஷ் சிவன் அவர் கையை பிடித்து தலையில் ஒத்திகொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
10/10