போன் எடுத்து வரக்கூடாது, போட்டோ எடுக்ககூடாது.. நயன்தாரா திருமணத்தில் விதிக்கப்பட்டுள்ள ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

பல வருட காதலுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ளது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம். கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் நாளை வெகு விமர்சையாக மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. முதலில் திருப்பதியில் வைத்து திருமணமும் பின்னர் சென்னையில் வைத்து வரவேற்பும் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால் திருப்பதியில் திருமணத்தை நடத்த முடியவில்லை என்று விக்னேஷ் சிவன் தனது பேட்டியில் கூறி இருந்தார். தற்போது நாளை நடைபெற உள்ள திருமணத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போன் எடுத்து வரக்கூடாது, போட்டோ எடுக்ககூடாது.. நயன்தாரா திருமணத்தில் விதிக்கப்பட்டுள்ள ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் 1

விளம்பரம்

நானும் ரவுடிதான் படத்தின் போது இயக்கனரான விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக லிவ்விங்கில் இருந்து வந்த இருவரும் நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்த திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு மிக முக்கிய விஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத், சூர்யா, விஜய் சேதுபதி, ஏ.ஆர். ரகுமான் போன்றவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிரபல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமான ஓடிடியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  எத்தனையோ தடவ கேட்டு பாத்துட்டேன்'க!!ஒரு வாட்டி கூட தனுஷ் ஹெல்ப் பண்ணல!!!உண்மையை பேட்டியில் கூறிய செல்வராகவன்.

போன் எடுத்து வரக்கூடாது, போட்டோ எடுக்ககூடாது.. நயன்தாரா திருமணத்தில் விதிக்கப்பட்டுள்ள ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் 3

விளம்பரம்

நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தண்ணீர் பாட்டில்களில் நயன்தாரா விக்னேஷ் சிவன் உள்ள புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் நாளை திருமணத்திற்கு வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விருந்தினர்கள் இப்படித்தான் டிரெஸ் அணிந்து வர வேண்டும் என்றும் கண்டிப்பாக மொபைல் போன் எடுத்துவர அனுமதி இல்லை என்றும், வேறு யாரும் புகைப்படம் எடுக்கவும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பேட்டியில் திருமணம் முடிந்து புகைப்படங்கள் மதியத்திற்கு மேல் வெளியாகும் என்று விக்னேஷ் அறிவித்து இருந்தார். இந்த கட்டுப்பாடுகளை பார்த்த நெட்டிசன்கள் இது கல்யாணமா? இல்லை வேறு ஏதாவாதா? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment