ஜூன் 9ம் தேதி விகனேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் சென்னையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு படத்தின் கதை சொல்வதற்காக நயன்தாராவை ஒரு தனியார் ஓட்டலில் வைத்து சந்தித்தார் விக்னேஷ் சிவன். பிறகு நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை இயக்கினார் விக்னேஷ் சிவன். அப்போது தொடங்கிய நட்பு பின்னர் இருவருக்கும் காதலாக மாறியது. ஆனால் 7 அண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கோவில்களுக்கு செல்வது, வெளிநாடு டூர் செல்வது என நாட்களை கடத்தி வந்தனர். இதனால் அவரது ரசிகர்கள் எப்போது திருமணம் என கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா கடைசியாக நடித்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் வெளியான பின்பு இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு பின்னர் சென்னை மகாபலிபுரம் கடற்கரை ரிசார்ட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். கோலாகலமாக நடந்த இவர்களின் திருமணத்தை ஓடிடி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வீடியோவாக வெளியிட உள்ளனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி சென்று சாமி தரிசனமும் செய்தனர்.இருவரும் தற்போது கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
திருமணத்திற்கு நயன்தாராவின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. நயன்தாராவின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கல்யாணத்திற்கு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவரும் இன்று கேரளாவிற்கு சென்றுள்ளனர். தற்போது செட்டிகுளங்கரா என்ற கோவிலுக்கு சென்ற இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.. Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Tamil Mithran