Categories: சினிமா

ஓவரா ஆடாத! அடங்கு..அடுத்தவன் பொண்டாட்டிய கட்டிக்கிட்டு பேச்ச பாரு.. ரவீந்தரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

வெளியிட்டது

தயாரிப்பாளர் ரவீந்தரை சில நாட்களாக நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்க்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன். இந்த நிறுவனத்தின் மூலமாக நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற சில படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் கடந்த வாரம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இருவரும் ஒன்றரை வருடங்களாக பேசி காதலித்து பின்னர் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளனர். திருப்பதியில் கோவிலில் வைத்து மிக எளிமையாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த யாரையுமே இவர்கள் அழைக்கவில்லை.

ஓவரா ஆடாத! அடங்கு..அடுத்தவன் பொண்டாட்டிய கட்டிக்கிட்டு பேச்ச பாரு.. ரவீந்தரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. 1

திருமணம் ஆன பின்பு புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த ரவீந்தர், மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு கிடைத்தால் நன்றாக இருக்கும், ஆனால் எனக்கு மகாலட்சுமியே பெண்ணாக கிடைத்திருக்கிறது என்று பதிவிட்டார். இதன் பின்னர் தான் திரையுலகினர் அனைவருக்கும் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவே தெரிய வந்தது. அதன் பின்னர் இருவரும் பேட்டிகளை அளித்து வருகின்றனர். அப்போது அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். ரவீந்தர் தயாரிப்பாளராக அறிமுகமானாரா இல்லையோ பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவருடன் இணைத்து சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

ரவீந்திரன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது மகாலட்சுமிக்கும் ரவீந்திருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த திருமணத்தை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் சிலர் ரவீந்தரை கடுமையாக விமர்சித்தும் வந்தனர், கிளிய வளர்த்து பணியிடம் கொடுத்து விட்டீர்களே என்று மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வந்தனர். இதனால் பேட்டிகளில் நெட்டிசன்களை தாக்கி ரவீந்தரும் சில தகவல்களை பேசி வந்தார். மேலும் தனது சோசியல் மீடியா முகநூல் பக்கத்திலும் தனது திருமணத்தை பார்த்து பலருக்கும் வயிறு எரிகிறது என்பது போல் எல்லாம் பதிவிட்டு வந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு கட்டத்தில் கடுப்பாகி இருக்கின்றனர்.

பலரும் ஊரில் இல்லாத மனைவியை திருமணம் செய்து கொண்டு விட்டீர்களா? கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், ஆட்டம் ஓவராக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் எங்களுக்கு எதற்கு வயிற்றெரிச்சல்? உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் பிடுங்கிவிட்டு உன் வயிற்றெரிச்சலை மகாலட்சுமி கொட்டிக்காமல் இருந்தால் சரிதான் என்றும், உலகத்தில் பல பெண்கள் வெளித்தோற்றத்தை பார்க்காமல் மனதை பார்த்து திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள், சும்மா உலகத்திலேயே நடக்காத ஒரு விஷயம் மாதிரி சீன் போட்டுக்கிட்டு இருக்காதீர்கள் என்றும் ரவீந்தரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்