Categories: சமூகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்! இந்திய வானிலை மையம்!!

வெளியிட்டது
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்! இந்திய வானிலை மையம்!! 1

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது, அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறியது. இந்நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்துள்ளது.

அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலட்ச தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது ‘மகா’ என்ற புதிய வடிவில் புயலாக மாறியது. இந்தநிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ஒடிசா அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். புல்புல் புயல் உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் அந்தமான் கடற் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்