“நீயெல்லாம் 15 தான், நான் 17 வாட்டி பாத்துருக்கேன்”!! ரஜினியின் அந்த படத்தை நான் 17 முறை பார்த்துள்ளேன் என பேசியுள்ள விஜய்!! அந்த படத்துல விஜயும் நடிச்சிருக்காரே!!

வெளியிட்டது

100 கோடி என்ற வசூல் என்ற கனவை நினைவாக்கி காட்டிய படம் நடிகர் ரஜினியின் “சிவாஜி” திரைப்படம். ரஜினி, ஏ.வி.எம், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 2007ஆம் வெளியான இந்த படம், தமிழில் முதல் 100 கோடி எடுத்த படமாக சாதனையை புரிந்தது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினி இருவருமே முதல் முறை கூட்டணி அமைத்த இந்த படம், ஷங்கரின் எல்லா படங்களை போலவும் அரசியலையும், ஊழலையும் மையப்படுத்தியே வெளியானது.

"நீயெல்லாம் 15 தான், நான் 17 வாட்டி பாத்துருக்கேன்"!! ரஜினியின் அந்த படத்தை நான் 17 முறை பார்த்துள்ளேன் என பேசியுள்ள விஜய்!! அந்த படத்துல விஜயும் நடிச்சிருக்காரே!! 1

அரசியலை நீண்ட காலமாக பேசிக்கொண்டிருந்த ரஜினி இந்த படத்தில் கொஞ்சம் ஒரு படி மேலே போய் இன்னும் குறிப்பாக ஊழல், லஞ்சத்தால் ஒருவர் படும் கஷ்டத்தை இளம் கொஞ்சம் வெளிப்படியாக பேசியதும் படத்தின் இந்த மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. நடிகை ஷ்ரேயாவின் கிளாமர், விவேக்கின் காமெடி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என அனைத்துமே தனித்துவமாக அமைந்து, ஷங்கரின் பிரமிக்க வைக்கும் கதைக்களமும், கதையோட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அப்போது வரை அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்தது மட்டுமின்றி தேசிய விருதை சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்ற பிரிவின் கீழ் வாங்கியது. தமிழ்நாடு அளவில் ஃபிலிம் ஃபேர் விருதுகளும் வென்றது இந்த படம். நேற்றோடு இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அவதில்லை 2007ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகி இருந்தது.

இதன் பின் நடிகர் ரஜினியும், ஷங்கரும் அடுத்தடுத்து 2 மெகா ஹிட் படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார். எந்திரன் மற்றும் 2.0 என இரண்டு படங்களுமே இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 2.0 படம் 850 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலை 6ஆம் இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் 15 ஆண்டுகள் கொண்டாடிய “சிவாஜி” படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் “படத்தை 15 முறைக்கு மேல பார்த்துள்ளேன்” என பேசி இருந்தது கொஞ்ச சலசலப்பையும், அவருக்கு கேலி கிண்டல்களையும் உண்டாக்கியது, ஈநிலையில் அதே போன்ற ஒரு பேச்சை நடிகர் விஜயும் பேசியுள்ளார். ஆனால் இப்போதில்லை பல வருடங்கள் முன்பே. அதுவும் சிவாஜி படமில்லை.

நடிகர் விஜயின் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் ரஜினி, அம்பிகா, பாக்கியராஜ் நடிப்பில் 1985ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “நான் சிகப்பு மனிதன்”. அதனை குறித்து தான் முன்னர் ஒரு பேட்டியில், விஜய் குறிப்பிடும் போது, “சொன்ன நமபமாட்டீங்க, நான் அந்த படத்தை 17 முறை பார்த்துள்ளேன்” என பேசிருக்கிறார். சிவகார்த்திகேயன் கலாய்க்கப்பட்டு வருவதால் நடிகர் விஜயின் இந்த பழைய பேச்சு இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்