விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கென மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் தற்போது சீசன் 2-வை இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு உருவாகி உள்ளனர். இதனால் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ராஜி, பாண்டியிடம் சென்று, தனக்கு டியூசன் எடுக்க அனுமதி கொடுக்க வேண்டும் என கூறுகிறார். மேலும்,பொண்ணுங்க சொந்த காலில் நிற்பது தப்பா, தானும் உங்களை போல சொந்தக்காலில் நிற்க வேண்டும் என கூறுகிறார். இதற்கு பதில் பேசாமல் பாண்டி அங்கிருந்து கிளம்பி செல்கிறார். மருமகள் கூறியதை யோசித்து பார்க்கிறார் பாண்டி.
பிறகு வீட்டிற்கு வந்த அவர், மருமகள் ராஜியை அழைத்து டியூசன் எடுக்க அனுமதி கொடுக்கிறார். இதனால் ராஜி மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION