விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து தற்போது மற்றொரு நடிகை விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குடும்பப் பாங்கான தொடர்களை ஒளிபரப்புவதில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தான் விஜய் தொலைக்காட்சி. இதில் ஒரு முக்கிய நாடகமாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் குடும்ப கதையை அழகாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் தொடர்ந்து விலகல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தொடரில் முறையாக நடித்துக் கொண்டிருந்த விஜே சித்ரா, இவர. எதிர்பாராத விதமாக மரணம் அடைந்து விட்டதால் அந்த ரோலில் காவியா அறிவுமணி நடித்து வந்தார். சமீபத்தில் அவரும் இந்த நாடகத்தில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் அந்த ரோலில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்த லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார். இவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சித்ராவிற்கு குரல் கொடுத்தவர் தான் இவருக்கும் குரல் கொடுப்பதால் பலரும் லாவண்யாவை முல்லையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக கண்ணனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை நாடகத்தில் இருந்து நீக்கினர். அவருக்கு முகத்தில் அதிக அளவு முகப்பரு இருந்ததால் தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று சொல்லி சீரியலில் இருந்து தன்னை விலக்கி விட்டதாக ஐஸ்வர்யாவே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரையும் ஏற்றுக் கொள்ளாத மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.
பின்னர் மூர்த்தியின் தாயாக நடித்து வந்தவர் கதாபாத்திரத்தையும் திடீரென முடித்திருந்தனர். இதனால் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து இதுபோல் திடீரென கதாபாத்திரத்தை முடிப்பதும், நாடகத்திலிருந்து நடிகர்கள் விலகுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தற்போது வீடு பிரச்சனையில் சிக்கி தவித்து வருவதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் கதையிலிருந்து மீண்டும் ஒரு விலகலாக கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவரும் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் இந்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.