பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து தற்போது மீனா வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். ஜீவாவும் கதிரும் தான் ஜனார்த்தனனை கத்தியால் குத்தி விட்டதாக பிரசாந்த் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதை ஒட்டு கேட்ட மீனா தற்போது வீட்டிற்கு வந்து பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவரை போக வேண்டாம் என்று பலரும் தடுத்தும் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனார்த்தனையில் இரண்டாவது மருமகனாக இருக்கும் பிரசாந்த் கத்தியால் குத்தி விடுகிறார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் போலீசாரிடம் சொத்துக்காக ஆசைப்பட்டு கதிரும் ஜீவாவும் இணைந்து தனது மாமனாரை கத்தியில் குத்தினர். தடுக்க வந்த தன்னை கத்தியால் குத்தி விட்டனர் என்று சொல்லி நாடகமாடுகிறார். இதை நம்பும் மீனா தற்போது நேராக வீட்டிற்கு வருகிறார். உண்மை என்னவென்று தெரியாத மீனா பெட்டிப் படுக்கைகளை எடுத்துக்கொண்டு தனது மகள் கயலையும் அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.
உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாத மீனா இப்படியான அவசர முடிவு எடுத்து இருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television