பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தற்போது ஒவ்வொரு ப்ரோமோக்களாக வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் நடுக்காட்டில் செய்யும் சதி ஆலோசனையை பற்றிய ஒரு ப்ரோமோவை படக் குழு தற்போது வெளியிட்டு இருக்கிறது. பொன்னியின் செல்வன் கதை பொதுவாக பாண்டிய நாட்டு மன்னர்களுக்கும் சோழ தேசத்து அரசர்களுக்கும் இடையே நடந்த போரை குறித்ததாக இருந்தது. பாண்டிய நாட்டு மன்னன் வீரபாண்டியனை, சோழ தேசத்து அரசர் ஆதித்த கரிகாலர் ஒரு போரின் தலையை வெட்டி கொன்றுவிடுவார் அதற்கு பலி வாங்கும் விதமாக, பாண்டிய நாட்டில் இருக்கும் ஆபத்துதவிகள் எப்படி தனது தந்திரத்தால் சோழ தேசத்தை அடைகின்றனர் அங்கு அவர்கள் சோழர்களின் அரியணைக்கு எப்படி பேராபத்தை ஏற்படுத்துகின்றனர் என்பது குறித்த கதை தான் பொன்னியின் செல்வன். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இதில் ஆபத்துதவிகள் என்பவர்கள் பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியனின் மெய்காப்பாளர்கள் அவர். இவர்கள் தங்களது உயிரை கொடுத்தாவது மன்னரை காப்போம் என்று காளி சிலை முன்பு நின்று தனது கையை அறுத்து ரத்தத்தில் சபதம் எடுத்துக் கொண்டவர்கள். இதுபோலவே சோழ மன்னர்களுக்கும் வேளாளர் படை, கைக்கோளப் பெரும்படை போன்ற மெய்க் காப்பாளர் படைகள் உண்டு. ஒரு போரில் வீரபாண்டியனை துரத்திச் சென்று அவரது தலையை கொய்து அதை தஞ்சாவூருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று விடுவார் ஆதித்த கரிகாலர். அதற்கு எப்படியாவது பழி வாங்க வேண்டும் ஆதித்த கரிகாலரை கொலை செய்து விட வேண்டும், அந்த அரியாசனத்தில் வீரபாண்டியனின் மகன் சிறுவனாக இருக்கும் அமரபூஜங்கனை அமர வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர்.
காளி சிலை முன்பு நின்று அவர்கள் இதற்கான சபதத்தை எடுத்துக்கொள்வார்கள் நடுக்காட்டில் நடக்கும் அந்த மந்திர ஆலோசனையை தற்போது ப்ரோமாவாக வெளியிட்டுள்ளது படக்குழு.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Moviebuff Tamil