Categories: சினிமா

“எந்த தைரியத்துல என் மேல கை வெச்ச”!! மேடையில் அநாகரிகமாக நடிகை பூர்ணா மேல் கை வைத்த போட்டியாளர்!!அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நடிகை பூர்ணா !!!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அதற்கு முன்பாக  மலையாளத்தில் வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற 2004ஆம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் கந்தகோட்டை, ஆடுபுலி, ஜன்னலோரம், தகராறு, மணல் கயிறு 2, கொடிவீரன், காப்பான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"எந்த தைரியத்துல என் மேல கை வெச்ச"!! மேடையில் அநாகரிகமாக நடிகை பூர்ணா மேல் கை வைத்த போட்டியாளர்!!அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நடிகை பூர்ணா !!! 1

தொடர்ந்து தெலுங்கில் அவுனு, அவுனு 2, லட்டு பாபு, மாமா மன்சு அல்லுடு கஞ்சு, அகண்டா என பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் பாலக்ரிஷ்ணாவுடன் நடித்த அகண்டா படம் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த சில முக்கிய படங்களில் கதைக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் தமிழில் வாய்ப்புகள் இவர்க்கு குறைவாகவே உள்ளது.

தமிழில் நடப்பது போலவே தெலுங்கலும் ரியாலிட்டி ஷோக்கள் அதிகம். இங்கு நடப்பது போலவே நடிகர், நடிகைகள் அதிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். தற்போது பூர்ணாவும் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீதேவி டிராமா கம்பெனி என்ற ரியாலிட்டி தொடரில் நடுவராக பங்கேற்றுள்ளார். அந்த நிகழச்சியில் சமீபத்தில் பூர்ணா பேசிக்கொண்டிருக்கும் போது போட்டியாளராக பங்கேற்ற இம்மானுவேல் என்பவர் பூர்ணா தோள் மேல் கை வைத்தார். அதனை சற்றும் எதிர்பாராத பூர்ணா தான் மீது கையை வைத்தவுடன் என்ன இதெல்லாம் என்னை செய்கிறாய், என்னை நீ எப்படி தொடலாம் என்று கோபமாக பேசிவிட்டு மேடையை விட்டு கோபமாக சென்றுவிட்டார்.

இதனால் அங்கு சற்று நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது. சண்டை போட்டுவிட்டு கோபமாக அங்கிருந்த சென்ற பூரணவை சமாதான படுத்த பலர் முயற்சித்தும் அவர் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். அப்போது மேடையில் சண்டையில் இருந்த மற்றொரு நடிகை ரஷ்மி பரபரப்பு தாங்காமல் திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்தார். உடனே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Video Courtesy – SudheerAnandBayana

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்