Categories: சினிமா

நான் பல தடவ செஞ்ச சத்தியத்தை மீறி இருக்கேன், உன் மனச ஒடைச்சிருக்கேன், ஆனாலும் நீ எனக்கு உன்னோட காதலை தான் கொடுத்த …..சினேஹாவை பற்றி உருக்கமாக பேசிய பிரசன்னா

வெளியிட்டது

தமிழ் திரை உலகில் திருமணம் ஆன பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழச்சிகளில் அவ்வப்போது நடுவராகவும் பங்கேற்று வருகிறார். பெரிய வெற்றிகள் இல்லை என்றாலும் அவருடைய  கணவர் பிரசன்னாவும் அதே போல தான் ஒரு பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

நான் பல தடவ செஞ்ச சத்தியத்தை மீறி இருக்கேன், உன் மனச ஒடைச்சிருக்கேன், ஆனாலும் நீ எனக்கு உன்னோட காதலை தான் கொடுத்த .....சினேஹாவை பற்றி உருக்கமாக பேசிய பிரசன்னா 1

சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சேர்ந்து அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற படத்தில் நடித்ததில் இருந்து தான் காதலித்து வந்த இவர்கள், சில வருடம் கழித்து பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

இப்போது நமது நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்தது தற்போது பலருக்கும் தெரிந்த ஒன்று, மேலும் நமது நடிகை சினேகாவுக்கு திருமணம் நடந்து தற்போது ஒரு மகன் ஒரு மகள் என்று இரு வாரிசுகள் இருக்கிறார்கள்.

நமது நடிகை சினேகா தற்போது வரை தனது திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிடவில்லை, சமீபத்தில் கூட நமது நடிகர் தனுஷ் நடித்த பட்டாசு என்ற திரைப்படத்தில் நடித்து நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.

ஆனால் நமது நடிகை சினேகா தற்போது பல வருடம் கழித்து நடிக்க வந்தாலும் நமது மகளின் ஆதரவு எப்போதுமே கிடைத்து வருகிறது, எப்போதும் மக்களிடம் வரவேற்பு இருப்பதால் இயக்குனர்களும் முக்கிய பாத்திரத்தில் இவரை படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து வருகின்றனர்.

இப்படி பட்ட இந்த நிலைமையில் நமது நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவின் திருமண நாளன்று தற்போது துபாயில் இருக்கிறார்கள். துபாயில் இருந்தாலும் நடிகர் பிரசன்னா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் தற்போது திருமணம் நடந்து சுமார் பத்து வருடம் முடிந்துள்ளது, ஆனால் இந்த ஒரு பாதை என்பது சாதாரணம் கிடையாது மிகவும் கடினமான பாதை, எனக்கும் சினேகாவுக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கும், நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கும், அப்போதெலம நீ உன்னோட காதலை  கொடுத்து என்னை மாற்றியுள்ளாய்.ஆனால் அதையெல்லாம் பொறுத்து எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் தான் தற்போது தனது குழந்தைகளுடன் வாழ்த்து வருகிறோம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்