சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மியை மறுமணம் செய்த ரவீந்தர்.! சத்தமில்லாமல் நடந்த திருமணம்

வெளியிட்டது

தமிழில் நட்புன்னா என்னன்னு தெரியுமா? முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்திரன். இவரை தயாரிப்பாளராக தெரிந்ததை காட்டிலும் பிக்பாஸ் விமர்சகராக தான் அதிகம் பரிச்சயமானவர். வனிதா பங்கு பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் இவர் வனிதாவை அதிகம் விமர்சித்தார். இதனால் இவருக்கும் வனிதாவுக்கும் பிரச்சினைகள் கூட ஏற்பட்டது. வனிதா பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்த போது இவர் கடுமையாக விமர்சித்தார். பீட்டர் பாலுக்கு இன்னொரு குடும்பம் இருந்தபோது ஏன் வனிதா ஏன் அவரை மறுமணம் செய்கிறார் என்று பேட்டிகள் அளித்தார். பின்னர் ஒருநாள் லைவ்வில் வனிதாவும் ரவீந்திரனும் சந்தித்துக் கொண்ட வீடியோ வைரலானது.பின்னர் எந்தவித சர்ச்சைகளிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார் ரவீந்திரன். ஆனாலும் பிக்பாஸ் ஒளிபரப்பப்படும் போதெல்லாம், ஃபேட்மேன் பார்வை என்று பிக்பாஸ் பற்றிய விமர்சனங்களை தொடர்ந்து கூறி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மியை மறுமணம் செய்த ரவீந்தர்.! சத்தமில்லாமல் நடந்த திருமணம் 1

இந்த நிலையில் தற்போது இவர் மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையை மறுமணம் செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. மகாலட்சுமி தாமரை, வாணி ராணி, தேவதையை கண்டேன் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் விஜேவாக சன் மியூசிக் இல் தனது வாழ்க்கை தொடங்கி, பின்னர் சின்ன திரையில் காலடி எடுத்து வைத்தார். தேவதையை கண்டேன் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கும், சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும் காதல் மலர்ந்தது. ஈஸ்வருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தன. மகாலட்சுமிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ, மகாலட்சுமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சாட்டியிருந்தார். தனது கணவர் ஈஸ்வரும் மகாலெட்சுமியும் கள்ளக்காதல் செய்கிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருந்தார்.

 

மேலும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றதால் ஈஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தன.ர் பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்தார். அது தொடங்கி மகாலட்சுமி ஈஸ்வரியின் காதல் முடிவுக்கு வந்தது. தற்போது மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சத்தமே இல்லாமல் இந்த மறுமணம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த ரவீந்திரன், மகாலட்சுமி போல் ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள், ஆனால் அந்த மகாலட்சுமியே வாழ்க்கையாக கிடைத்தால் என்று பதிவிட்டுள்ளார். சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த ரவீந்திரன் திருமணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits:

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்