தமிழ் திரை ரசிகர்களின் மிக பெரிய கனவு படமாக இப்பொது இருப்பது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஜெயகாந்தன் இளங்கோ குமரவேல் எழுத்தில், அமரர் கலக்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் “மெட்ராஸ் டாக்கிஸ்” மற்றும் “லைகா ப்ரோடுக்ஷன்ஸ்” சுபாஷ்கரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆதித்ய கரிகாலனாக “சீயான்” விக்ரம், அருள்மொழி வர்மனாக “ஜெயம்” ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டவனாக சரத்குமார், சின்ன பழுவேட்டவராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் என பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக செட் டிசைன், பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகள், குந்தவை – நந்தினியின் சந்திப்பு என டீசேரிலேயே சின்ன படம் ஒன்றை காட்டியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இந்த படம் ஏற்கனவே மணிரத்னம் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரையும் முன்னணியில் வைத்து எடுக்க திட்டமிட்டு பின்னர் கைவிட்டு போனது. இப்பொது வேறொரு நடிகர் பட்டாளத்தில் அதே போல பிரமாண்ட சிந்தனையுடன் படம் தயாராகியுள்ளது.
தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஆகப்பெரும் சினிமா கலைஞர் கமல். இவர் இப்பொது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு அங்கமாக மாறியுளளார். தமிழ் உச்சரிப்பில் சிறந்த கமலை வைத்து இந்த கதையின் விரிவாக்கத்தை பேசவைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதற்கான டப்பிங்கை கமல் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
டீசர் சில வாரங்கள் முன்பு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக பெரிய அளவில் உள்ளது. இப்பொது வெளியீட்டு தேதி நெருங்கி வரும் வேலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை முடிக்கிவிட படக்குழு தயாராகி வருகிறது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்து அதற்கான ஒரு சின்ன மேக்கிங் விடீயோவையும் வெளியிட்டுள்ளனர் படக்குழு.
அந்த வீடியோவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபல டிரம்ஸ் கலைஞர் டிரம்ஸ் சிவமணி இருவரும் இணைந்து பாடல் ஒன்றிற்கு மேட்டுமைத்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் குறிப்பாக கவனம் ஈர்ப்பது இருவரின் உழைப்பே. இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவியது.
இப்பொது படத்தின் முதல் சிங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதவது வரும் ஜூலை 31ஆம் தேதி ஆடி திருநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வனின் முதல் பாடல் நாயகன் கார்த்தியின் வந்திதேவனின் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ரசிகர்கள் இப்பொது உற்சாகம் அடைந்துள்ளனர்
Video Courtesy – Tips tamil